SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL | சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரைSWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL | சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL – பிறப்பு

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.

அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

கல்லூரி வாழ்க்கை

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: நரேந்திர நாதன் தன்னுடைய 17 வயது கல்லூரிகள் சேர்ந்தார். அதுவரை காலமும் வேடிக்கை வினோதங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த நரேந்திரநாதன் பாட புத்தகங்களை தவிர மெய்யறிவு ஊட்டும் வேறு சில புத்தகங்களையும் படிக்க ஆர்வம் கொண்டார்.

தாய்மொழியாகிய வங்காளம், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் தத்துவ ஞான தர்க்கம் தேச சரித்திரம் முதலியவைகளிளிலும் அவர் மேம்பாடு அடைந்திருந்தார்.

RAMAKRISHNAR HISTORY IN TAMIL | இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை

மேலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நகைச்சுவையாக பேசுவதிலும் சிறந்த வழங்கினார். அவருடைய மேம்பாடுகளை முன்னிட்டு மாணவர்கள் கூட்டம் ஒன்று எப்போதும் அவரை சூழ்ந்து கொண்டிருக்கும்.

ஆனால் வீண் ஆடம்பரத்தையும் சொகுசையும் நரேந்திரன் ஒரு நாளும் ஏற்றுக் கொண்டது இல்லை. சங்கீதத்தில் மிக தேர்ச்சி பெற்றிருந்தார்.நரேந்திரன் தனது முழு மனதையும் பாட புத்தகத்திலேயே செலுத்தி தேர்வுகளில் சிறப்புடன் இளநிலை பட்டதாரி ஆனார். பின்பு அவர் சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.

ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம்

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: மேற்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், 1897ல் இந்தியா திரும்பினார். இந்தியர்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சிக்கான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார்.

‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று அவர் உணர்ந்தார். இந்த குறிக்கோளை அடைய, சுவாமி விவேகானந்தர் அவர்கள், 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், கங்கை நதிக்கரையில் பேலூரில் ஒரு தளம் வாங்கினார். அங்கு, அவர் கட்டிடங்களைக் கட்டமைத்து, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடத்தை’ நிறுவினார். மீண்டும், அவர் ஜனவரி 1899 முதல் டிசம்பர்1900  வரை மேற்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL | சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை
SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL | சுவாமி விவேகானந்தர் பற்றிய கட்டுரை

சுற்றுப்பயணம்

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு வகையான மக்களின் நிலையை கண்டு அறிந்தார். நமது நாடு, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணத்தை உணர்ந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதிநிதித்துவம்

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: அந்த நேரத்தில், 1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற இருந்த “உலக சமய மாநாட்டில்”, சுவாமி விவேகானந்தர் பங்கேற்று, இந்து மதத்தை பிரதிநிதித்துவம் செய்து, சொற்பொழிவாற்ற வேண்டும் என, அவரது சகாக்கள் விரும்பினர்.

கன்னியாகுமரியில் கடுந்தவம் புரிந்த விவேகானந்தர், அமெரிக்கா செல்வது என தீர்மானித்தார். அவருடைய செலவிற்காக, சென்னை இளைஞர்கள், பல கட்டமாக பணம் சேகரித்து, 1893 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு வழி அனுப்பினர்.

செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஆற்றிய உரை, உலகையே அதிர வைத்தது. அதன் பின்னர், உலகம் அறிந்த பிரபலம் ஆக மாறினார், சுவாமி விவேகானந்தர்.

விவேகானந்தர் பாறை நினைவகம்

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: “இதயத்துக்கும் மூளைக்கும் இடையிலான மோதலில், உங்கள் இதயத்தைப் பின்பற்றுங்கள்” என்று இதுவரை வாழ்ந்த ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் கூறினார்.

நீங்கள் கன்னியாகுமரியை அடைந்ததும், விவேகானந்தர் பாறை நினைவகம் அதன் பிரமிக்க வைக்கும் கம்பீரத்துடன் உங்களை அழைக்கும் என்பதால், உங்கள் இதயத்தையும் மூளையையும் ஒரே மாதிரியாகப் பின்தொடராமல் இருக்க முடியாது.

இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான விவேகானந்தர் பாறை நினைவகம் கடலில் உள்ள பாறையின் மீது, நிலப்பரப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி மற்றும் எழுத்தாளர், சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் இந்தியாவின் ஆன்மீகப் புகழை உலகுக்கு எடுத்துச் சென்றார். பெரிய துறவியின் நினைவாக 1970 இல் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

நினைவுச்சின்னம் உள்ள பாறை விவேகானந்தர் ஞானம் பெற்ற இடத்தில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த பாறையில் தான் கன்னியாகுமரி தேவி சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்ததாகவும், இதனால் இந்தியாவின் மத வளாகங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

பாறையில் ஒரு சிறப்பாக பாதுகாக்கப்பட்ட பகுதி உள்ளது, இது தெய்வத்தின் பாதத்தின் முத்திரை என்று நம்பப்படுகிறது. நினைவுச்சின்னம் பல்வேறு கட்டடக்கலை வகைகளின் நேர்த்தியான கலவையைக் காட்டுகிறது.

ஸ்ரீபாத மண்டபம் மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவை நினைவகத்தில் ஆராயப்பட வேண்டிய இரண்டு கட்டமைப்புகள் ஆகும். வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அளவிலான வெண்கலச் சிலையும் உள்ளது.

வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபிய கடல் ஆகியவை சங்கமமாக இருக்கும் இந்த பாறை லட்சத்தீவு கடலால் சூழப்பட்டுள்ளது. இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது மற்றும் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

மறைவு

SWAMI VIVEKANANDA HISTORY IN TAMIL: 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

  1. உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே
    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்
  2. கபடம் இல்லாத நாத்திகன், வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான் – சுவாமி விவேகானந்தர்
    இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும், அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை
  3. பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..! உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன
  4. உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
  5. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்…!
  6. உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
  7. “நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.
  8. கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
  9. நீ செய்த தவறுகளை வாழ்த்து அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
  10. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு
  11. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது
  12. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்
  13. கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான் ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *