THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.

உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார்

அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

பிறப்பு – THIRUVALLUVAR HISTORY IN TAMIL

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.

சிறப்புப் பெயர்கள்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:

  • தேவர்
  • நாயனார்
  • தெய்வப்புலவர்
  • செந்நாப்போதர்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர்
  • மாதானுபங்கி
  • முதற்பாவலர்
THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்
THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்

திருவள்ளுவர் ஆண்டு

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.ஊ. 2023 ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி. 2054 ஆம் ஆண்டு ஆகும்.

தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. சக ஆண்டு, விக்கிரம ஆண்டு, கலி ஆண்டு என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டு தொட்டே கொல்லம் நாட்காட்டி பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.

To Download TNPSC Current Affairs 2023 Tamil PDF

மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பொ.ஊ.மு. 31 என்று கணித்திருந்தார். சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ, கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப்புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்தப்பின்னணியில் கருணாநிதியின் தி.மு.க அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் “திருவள்ளுவர் ஆண்டு” எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தியது.

1971இல் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்

நினைவுச் சின்னங்கள்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.

133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.

அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்
THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்

திருவள்ளுவர் சிலை

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: வெகுதொலைவில் இருந்து பார்க்கும் திருவள்ளுவர் சிலையின் கம்பீரம் பார்ப்பதற்கு ஒரு காட்சி. இது 41 மீட்டர் உயரத்தில் உள்ளது, ஆழமான நீல வானம் மற்றும் ஒளிரும் கடல் பின்னணியில் உள்ளது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குப் பக்கத்தில், ஒரு பாறையில் அமைந்துள்ள, திருவள்ளுவரின் மூச்சடைக்கும் சிலை, இந்திய சிற்பி வி.கணபதி ஸ்தபதியால் உருவாக்கப்பட்டு, ஜனவரி 1, 2000 அன்று அப்போதைய தமிழ்நாடு  முதல்வரான மு. கருணாநிதியால் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும் அறிஞரும் ஆவார், மேலும் அவர் நெறிமுறைகள், அரசியல், பொருளாதாரம் மற்றும் காதல் போன்ற விஷயங்களைப் பற்றிய இரட்டை வரிகளின் தொகுப்பான ‘திருக்குறள்’ ஆசிரியராக அறியப்படுகிறார்.

திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிலை மற்றும் பீடத்தின் மொத்த உயரம் 133 அடி (41 மீட்டர்) ஆகும். இது திருக்குறளின் 133 அத்தியாயங்களைக் குறிக்கிறது.
திருவள்ளுவரின் சிற்பம் 95 அடி (29 மீட்டர்) மற்றும் இது 38 அடி (12 மீட்டர்) பீடத்தில் நிற்கிறது, இது குறள் உரையின் மூன்று புத்தகங்களில் முதல் அறத்தின் 38 அத்தியாயங்களைக் குறிக்கிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது புத்தகங்கள் – முறையே செல்வம் மற்றும் அன்பு – சிலை மூலம் குறிப்பிடப்படுகின்றன.

சிலை மொத்தம் 7000 டன் எடை கொண்டது. இந்த சிலை இந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் சிலையின் அடிவாரம் வரை மட்டுமே ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

விவேகானந்தர் பாறை நினைவகத்துடன், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த சிலை, தமிழ்நாட்டிற்கான உங்கள் பயணத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

திருவள்ளுவர் தினம்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: தமிழ் மக்கள் தம் வாழ்வில் நித்தம் வாசித்து, இன்புற்று, சிந்தித்து, தாமும் கடைபிடித்து, பிறருக்கும் எடுத்துக் கூறி உயர்ந்து வாழ உதவும், தமிழ் இலக்கிய நூல் திருக்குறளாகும். இத்திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்கி, இரண்டு அடிகளில் உலகத் தத்துவங்கள் மொத்தமும் ‘திருக்குறள்’ என்னும் படைப்பில் நமக்கு கொடுத்துள்ளார் திருவள்ளுவர்.

இத்தகைய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரை போற்றும் வண்ணம் தமிழக அரசு ஜனவரி 15 ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக அங்கீகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் நிகழ்வாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நாள் அரசு விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

வள்ளுவர் கோட்டம்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது.

இந்நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது.

இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம். அக்டோபர் 16, 2002 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம், 2002 (தமிழ்நாடு சட்டம் 32 -2002) கீழ் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது.

அதன் பின்னர் வேலூரை அடுத்த சேர்க்காட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ளது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றன.

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்

THIRUVALLUVAR HISTORY IN TAMIL: மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும். ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், மயிலாப்பூரில் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.

திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது.

வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

இக்கோவிலை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *