JAWAKARLAL HISTORY IN TAMIL | ஜவகர்லால் நேரு பற்றிய கட்டுரைJAWAKARLAL HISTORY IN TAMIL | ஜவகர்லால் நேரு பற்றிய கட்டுரை

JAWAKARLAL HISTORY IN TAMIL: ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL | கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய கட்டுரை

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்.

அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

பிறப்பு: 14.11.1889 அன்று உத்திரப் பிரதேச மாநிலம்  (அலகாபாத் ஆனந்தபவன்)

இறப்பு: 27.05.1964

பெற்றோர்: மோதிலால் நேரு – சொரூபராணி

கல்வி

JAWAKARLAL HISTORY IN TAMIL: பள்ளிப் படிப்பை முடித்தும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார்.

தந்தை வேண்டுகோளுக்காகப் சட்டம் படித்த நேரு, 1912 – இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் ஆண்டின் இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.

வாழ்க்கை வரலாறு – JAWAKARLAL HISTORY IN TAMIL

  1. 1912 – இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
  2. 1916 – இல் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காந்தியை முதன்முதலாக சந்தித்தார்.
  3. 1916 – இல் கமலா கவுல் என்பவரை மணந்தார்.
  4. 1916 – இல் கிஷான் சபையின் துணைத்தலைவரானார்.
  5. 1917 – நவம்பர் 19 அன்று இந்திரா பிரியதர்சினி பிறந்தார்.
  6. 1919 – 1932 வரை The Independent என்ற செய்தித்தாளை நடத்தினார்.
  7. 1929 – இல் காந்தியின் வழிகாட்டுதலின் படி லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி நடத்தினார். பூரண சுயராஜ்ஜியம் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
  8. 1937 – பெய்ஸ்பூர் – காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். (கிராமத்தில் நடந்த முதல் மாநாடு).
  9. 1940இல் தனிநபர் சத்யாகிரகத்தின் பொது ஆச்சார்ய வினோபாபாவேவிற்கு அடுத்து இரண்டாவதாக கைது செய்யப்பட்டார்.
  10. தனது சயசரிதையை “AN Autobiography” என்ற தலைப்பில் எழுதினார். (Toward Freedom என்ற பெயராலும் இந்நூல் அறியப்படுகிறது).
  11. 1945 – ஜூன் 15 ஆம் தேதி நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக கைது செய்யப்பட்டார்.
  12. 1947 – ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது “விதியோடு செய்து கொண்ட ஒப்பந்தம்” என இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையையும், “உலகம் உறங்கும்போது இந்தியா விழித்துக்கொண்டது” எனவும் வர்ணித்தார்.
  13. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக மெளண்ட்பேட்டன் பிரபுவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
JAWAKARLAL HISTORY IN TAMIL | ஜவகர்லால் நேரு பற்றிய கட்டுரை
JAWAKARLAL HISTORY IN TAMIL | ஜவகர்லால் நேரு பற்றிய கட்டுரை

நேருவின் முக்கியமான சாதனைகள்

  • 1950 – மார்ச் 15 நேரு தலைமையில் தேசிய திட்ட கமிஷன் அமைக்கப்பட்டது.
  • 1951 – இல் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.
  • 1952 – இல் முதல் பொதுத் தேர்தல்.
  • 1952 – இல் முதல் ராஜ்ய சபா தேர்தல்.
  • 1952 – இல் முதல் பாராளுமன்றம் கூடியது.
  • 1952 – இல் தேசிய வளர்ச்சிக் குழு துவக்கம்
  • 1953 – இல் UGC அமைக்கப்பட்டது.
  • 1954 – இல் பஞ்ச சீலக் கொள்கையை வெளியிட்டார்.
  • தீன் மூர்த்தி பவன் – நேரு பிரதமராக இருந்த காலத்தில் அவருடைய இல்லமாகவும், தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றைக செயல்பட்டு வருகிறது.

நினைவு

  • JAWAKARLAL HISTORY IN TAMIL: இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
  • மும்பை நகரத்தின் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம்.
  • டில்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகளும் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *